108 சிங்கள தாதியர்கள் வடமாகாணத்திற்கு நியமனம்.

ஆசிரியர் - Editor I
108 சிங்கள தாதியர்கள் வடமாகாணத்திற்கு நியமனம்.

வடமாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றிய 70 தாதியர்கள் வேறு மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மாகாணத்திற்கு வழங்கப்பட்ட 110 தாதியர்களில் 102 தாதியர்களுக்கு  இன்று நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல் புதிதாக மாகாணத்திற்கு 9 பொது சுகாதார பரிசோதகர்கள் பணியில் இணைக்கப்பட்டு அவர்களுக்கும் நேற்று நியமனங்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் நியமனங்கள் தொடர்பாக மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீ லன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், வடமாகாணத்திலிருந்து வேறு மாகாணங்களுக்கு இடமாற் றம் வழங்கப்பட்டிருந்த 70 தாதியர்களுக்கு இன்று இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை வட மாகாண வைத்தியசாலைகளில் பணியாற்ற 110 தாதியர்கள் வழங்கப்பட்டிருந்தது. அவர்களில் 102 பேருக்

கு நியமனக்கடிதங்களை இன்று வழங்கியுள்ளேன். அதேபோல் புதிதாக 9 பொதுசுகாதார பரிசோதகர் களுக்கும் நியமன கடிதங்களை வழங்கியிருக்கின்றேன். மேலும் வடமாகாணத்தில் இரத்த சுத்தீகரிப்பு சிகிச்சை தொகுதியை வைத்திருக்கும் 7 வைத்தியசாலைகள் உள்ளன. அவற்றுக்கு முன்னுரிமை அடிப்ப டையில் 2 தாதியர்கள் வீதம் பகிர்ந்து கொடுத்துள்ளோம். 

மேலதிகமாக உள்ள தாதியர்களை தேவை அடிப்படையினர் 5 மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுத்திருக்கின்றோம் என்றார். இதேவேளை வடம hகாணத்தி ற்கு வழங்கப்பட்ட 110 தாதியர்களில் 108 பேர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என வெளியாகும் தகவல் தொடர்பாக சுகாதார அமைச்சரிடம் கேட்டபோது, ஆம் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த தாதியர்களே என கூறியதுடன், தமிழ் இளைஞர், யுவதிகள் தாதிய உத்தியோகத்திற்கான விண்ணப்பங்களை செய்வதில்லை. 

இதனால் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகளே விண்ணப்பங்களை செய்து வடமாகாணத்திற்கும் சேவை செய்ய அனுப்பப்படும் நிலை காணப்படுகின்றது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு