அவசரகால நிலைமையினையோ, ஊரடங்கு சட்டத்தையோ மதிக்கமாட்டோம்..! தமிழ்தேசிய கூட்டமைப்பு திட்டவட்டம்..

ஆசிரியர் - Editor I
அவசரகால நிலைமையினையோ, ஊரடங்கு சட்டத்தையோ மதிக்கமாட்டோம்..! தமிழ்தேசிய கூட்டமைப்பு திட்டவட்டம்..

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலைமையினையோ அல்லது ஊரடங்கையோ நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

இவை அனைத்தும் சட்டவிரோதமான உத்தரவுகள் இதன் காரணமாகவே நாங்கள் வீதிக்கு வந்துள்ளோம் அந்த உத்தரவுகளிற்கு அடிபணிய மறுக்கின்றோம் அவை சட்டவிரோதமான உத்தரவுகள் என எங்களிற்கு நன்றாக தெரியும்.

அவை அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சவால் விடுக்கும் எவருடனும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்படும்.

எங்கள் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமை குறித்து  நான் திருப்தியடைகின்றேன்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு