யாழ்.கொக்குவில் கிழக்கில் கஞ்சா கடத்தல்காரர்களின் வீடு முற்றுகை! கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் கிழக்கில் கஞ்சா கடத்தல்காரர்களின் வீடு முற்றுகை! கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்...

யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியில் நேற்றிரவு சுமார் 28 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நபர் தொடர்பாக பிரதேச இளைஞர்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு விரைந்து செயற்பட்ட நிலையில் குறித்த வீடு முற்றுகையிட்டப்பட்டுள்ளது.

எனினும் பொலிசார் வருவதை உணர்ந்த சந்தேகநபர்கள் கஞ்சா பொதிகள் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு