யாழ்.மாவட்ட கொவிட்-19 சிகிச்சை நிலையங்களில் நடந்தது என்ன? வடக்கு ஆளுநருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் விசாரணைக்கு உத்தரவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட கொவிட்-19 சிகிச்சை நிலையங்களில் நடந்தது என்ன? வடக்கு ஆளுநருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் விசாரணைக்கு உத்தரவு..

யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கொவிட்-19 சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். 

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களை நேற்று (31) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு கௌரவ பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாயமாகியிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியது.

வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த கொரோனா இடைத்தங்கல் முகாம்கள் செயற்பட்டுவந்தன.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு