இன்று மாலை தமிழ்தேசிய கூட்டமைப்பை சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மேனன்..!

ஆசிரியர் - Editor I
இன்று மாலை தமிழ்தேசிய கூட்டமைப்பை சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மேனன்..!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மேனன் இன்று மாலை தமிழ்தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு இந்திய இல்லத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு, புதிய அரசியல் அமைப்பு உருவாக்க செயற்பாடு, 13 ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கம், வடக்கு மீனவர் விவகாரம், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து 

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேசப்படும் என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு