ஜனாதிபதி எங்களை பேசுகிறார்..! நாங்கள் எப்போது தமிழ் மக்களின் காணிகளை பிடித்தோம்? கூட்டமைப்பிடம் கேட்டாராம் இராணுவ தளபதி..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி எங்களை பேசுகிறார்..! நாங்கள் எப்போது தமிழ் மக்களின் காணிகளை பிடித்தோம்? கூட்டமைப்பிடம் கேட்டாராம் இராணுவ தளபதி..

இராணுவம் மக்களின் காணிகளை சுவீகரிப்பதாக ஜனாதிபதியிடம் கூறியதால் அவர் எம்மை ஏசுகின்றார். இராணுவம் எப்போது மக்களின் காணிகளை சுவீகரித்தது? என்று தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜனாதிபதி - தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது தமிழர் தாயகத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள நில சுவீகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கூட்டமைப்பு கொண்டு சென்றுள்ளது. 

இந்த கூட்டம் நிறைவடைந்த சில மணி நேரங்களில் இராணுவ தளபதி கூட்டமைப்பை தொடர்பு கொண்டு தொிவித்திருக்கின்றார். இதற்கு இராணுவத்தினர் சுவீகரித்த காணி பற்றிய விடயங்கள் எங்களிடம் உள்ளது. தேவை ஏற்படின் அதனை வெளிப்படுத்த முடியும் என கூட்டமைப்பு இராணுவத்திடம் தொிவித்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு