தமிழ்தேசிய கூட்டமைப்பு - ஜனாதிபதி இடையிலான சந்திப்பு இன்று..!

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பு - ஜனாதிபதி இடையிலான சந்திப்பு இன்று..!

தமிழ்தேசிய கூட்டமைப்பு - ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இடையிலான ஒத்திவைக்கப்பட்ட சந்திப்பு இன்று நடைபெறவுள்ளதாக தமிழ்தேசிய கூட்மைப்பு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இது குறித்து கட்சியின் ஊடக பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், நிலையான ஓர் அரசியல் தீர்வு பெறுவது குறித்தான விடயங்கள் மாத்திரமே இன்றைய பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்படும் என கூறியுள்ளதுடன்,   

அவ்வாறு, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று கிடைத்தால் புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும், அதிகாரப்பகிர்வு ஒன்றின் ஊடாக 

அரசியல் தீர்வுகான பணிகளை அரசாங்கம் முன்னெடுத்தால் மாத்திரமே இது சாத்தியமாகும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு