யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் நிறுத்தப்படுகிறது..! வைத்தியர்கள் விலகல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் நிறுத்தப்படுகிறது..! வைத்தியர்கள் விலகல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கு நடத்தப்பட்டுவந்த பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று தொடக்கம் மேற்கொள்ளப்படாது. என பணிப்பாளர், வைத்திய கலாநிதி நந்தகுமார் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையில் 

மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது என்றார். அதேவேளை நோயாளிகளுக்கான பிசிஆர் பரிசோதனைகள் 

தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு