இ.போ.ச பேருந்தில் பயணித்த முதியவரின் பண பையை பறித்துக் கொண்டு ஓடிய நபருக்க நடந்த தரமான சம்பவம்..!

ஆசிரியர் - Editor I
இ.போ.ச பேருந்தில் பயணித்த முதியவரின் பண பையை பறித்துக் கொண்டு ஓடிய நபருக்க நடந்த தரமான சம்பவம்..!

இ.போ.ச பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவரிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறத்துக் கொண்டு ஓடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்துள்ளனர். 

இந்த சம்பவம் மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் இடம்பெற்றுள்ளது. மெனிக்பாம் பகுதியை சேர்ந்த முதியவர் எழுத்துார் பகுதியில் வசிக்கும் தனது மகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, 

வவுனியா நோக்கி பயணித்த நிலையில் அவரின் அருகில் இருந்து பயணித்த திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவர் நானாட்டான் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது, 

முதியவரிமிருந்த பண பையை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். இதனையடுத்து முதியவர் கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் திருடனை மடக்கி பிடித்து கவனித்த பின்னர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு