யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் இடம்பெற்ற களவு சம்பவத்தை தொடர்ந்து மூடப்பட்ட வாயில் கதவுகள்..! கர்ப்பவதிகளும் வீதியில் நிறுத்தப்பட்டதால் முறுகல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் இடம்பெற்ற களவு சம்பவத்தை தொடர்ந்து மூடப்பட்ட வாயில் கதவுகள்..! கர்ப்பவதிகளும் வீதியில் நிறுத்தப்பட்டதால் முறுகல்..

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தை தொடர்ந்து வாகனங்களில் வருவோரை தமது அனுமதி இல்லாமல் உள்ளே அனுமதிக்ககூடாது. என உயர் அதிகாரிகள் பணித்ததால் கிளினிக்கிற்கு வந்த கர்ப்பவதி பெண்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் கிளினிக்கிற்காக வந்திருந்த கர்ப்பவதி பெண்கள் சிலர் வாசலிலேயே தடுக்கப்பட்டுள்ளனர். இதனால் காவலாளிக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் மூண்டதுடன், காவலாளியை தாக்கவும் முயன்றுள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு