யாழ்.சிறைச்சாலையில் உணவு ஒறுப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள 3 தமிழ் அரசியல் கைதிகள்! அவர்களுக்கு ஆதரவாக ஆளுநர் செயலகம் முன்பும் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறைச்சாலையில் உணவு ஒறுப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள 3 தமிழ் அரசியல் கைதிகள்! அவர்களுக்கு ஆதரவாக ஆளுநர் செயலகம் முன்பும் போராட்டம்..

யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 3 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அவர்களது உறவினர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருக்கின்றனர். 

குறித்த அரசியல் கைதிகள் இன்று அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர். இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றமை மற்றும் தீய செயல்களைச் ஏற்படுத்தும் பொருட்டு வெடிபொருள் தயாரிப்புக்கு உதவியமை போன்ற குற்றச்சாட்டில் இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன், நல்லதம்பி நகுலேஸ்வரி மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம்

3 மற்றும் 06 ஆம் திகதிகளிலும், 2 ஆயிரத்து 21 ஆம் 5 ஆம் மாதம் 28 ஆம் திகதியிலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குறித்த சிறைக் கைதிகளின் உறவினர்கள் கைதிகளுக்கு ஆதரவாக 

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகிறனர்.மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு