க.பொ.த உயர்தர பரீட்சை மண்டபத்திற்குள் கையடக்க தொலைபேசியுடன் அதிபரின் மகன் சிக்கினார்! தொலைபேசி வழியாக உதவிய ஆசிரியர்கள் பணி இடைநிறுத்தம்..

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தர பரீட்சை மண்டபத்திற்குள் கையடக்க தொலைபேசியுடன் அதிபரின் மகன் சிக்கினார்! தொலைபேசி வழியாக உதவிய ஆசிரியர்கள் பணி இடைநிறுத்தம்..

கையடக்க தொலைபேசி மற்றும் பரீட்சை மண்டப கண்காணிப்பில் இருந்த ஆசிரியர் உதவியடன் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய அதிபரின் மகன் கையும் களவுமாக மாட்டியிருக்கின்றார். 

குறித்த சம்பவம் மன்னார் - மடு அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இது குறித்த மேலும் தொியவருவதாவது, அண்மையில் இடம் பெற்ற கணித பாட பரீட்சையின்போது 

குறித்த பாடசாலை அதிபரின் மகன் பாடசாலை பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று பிரிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதியபோது கையும் களவுமாக மாட்டியுள்ளார்.

தற்போது க.பொ.த. உயர்தர பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் மன்னார் - மடு கல்வி வலயத்தின் அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் உயர்தர பரீட்சைகள் இடம் பெற்று வருகின்றது.

இதன்போது அதிபரின் மகனான மாணவன் கணித பாட பரீட்சையில் பரீட்சை மண்டபத்தினுள் மறை முகமான முறையில் கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் பிரிதொரு பாடசாலையின் பரீட்சை மண்டபத்தில் கடமையில் இருந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கணித பாடத்திற்கான பரீட்சை வினாத்தாளை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து 

அதனை ஒரு ஆசிரியருக்கு அனுப்பி அதற்கான விடையை குறித்த ஆசிரியர் மீள குறித்த மாணவனுக்கு கையடக்கத் தொலைபேசிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.

குறித்த மாணவன் கையடக்கத் தொலைபேசியின் வாட்ஸ்அப் மூலம் வந்ததாக கூறப்படும் குறித்த வினாக்களுக்கான விடையை தொலைபேசியை பார்த்து பரீட்சை வினாத்தாளுக்கு விடை எழுதிக் கொண்டிருந்தார்.

இதன் போது குறித்த பரீட்சை மண்டபத்தில் பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் குறித்த மாணவன் கையடக்கத் தொலைபேசியை பார்த்து விடை எழுதிக் கொண்டு இருப்பதை அவதானித்துள்ளார்.

உடனடியாக குறித்த ஆசிரியர் மாணவனை கையும் களவுமான பிடித்துள்ளார். விடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், 

மற்றும் அடம்பன் பொலிஸ் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பரீட்சை மண்டபத்திற்கு வருகை வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த சம்பவத்துடன் ஈடுபட்டதாக கூறப்படுகின்ற ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்கள் கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். 

மேலதிக விசாரணைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு