ஆசிரியர் தாக்கியதில் மயக்கமடைந்த அதிபர் வைத்தியசாலையில்..! பாடசாலை சுற்றாடலில் களேபரம்..

ஆசிரியர் - Editor I
ஆசிரியர் தாக்கியதில் மயக்கமடைந்த அதிபர் வைத்தியசாலையில்..! பாடசாலை சுற்றாடலில் களேபரம்..

ஆசிரியை தாக்கியதில் அதிபர் மயக்கமடைந்ததை தொடர்ந்து பாடசாலை மாணவிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதால், திருகோணமலையில் பிரபல பெண்கள் பாடசாலை சுற்றாடலில் களேபரம் மூண்டது. 

குறித்த பிரபல பெண்கள் கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் ஹபாயா விவகாரம் தொடர்பில் பிரச்சினை எழுந்த நிலையில் இன்று மீண்டும் அவ்விவகாரம் மாணவர்கள் - ஆசிரியர்கள் - பெற்றோர் மத்தியில் பூதாகரமாக மாறியுள்ளது.

இன்று ஓர் ஆசிரியை முகத்தை முழுவதுமாக மறைத்து 'ஹபாயா' அணிந்து பாடசாலைக்கு வந்த நிலையில் மாணவர்களும் பெற்றோரும் இதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளனர். 

இதை குறித்த ஆசிரியை காணொளிப் பதிவு செய்துள்ளதாகவும் அதைத்தடுக்க அதிபர் தலையீடு செய்ததை யடுத்து அதிபரை குறித்த ஆசிரியை தள்ளி விட்டதாக வும் இதையடுத்து கீழே விழுந்து மயக்கமடைந்த அதிபர் 

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு