இந்தியாவுக்கு பேரம் போகமாட்டோம்!

ஆசிரியர் - Admin
இந்தியாவுக்கு பேரம் போகமாட்டோம்!

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கத்தி கத்தி களைத்து விட்டோம். ஆனாலும் இந்தியாவுக்கு பேரம் போகமாட்டோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.     

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாம் தெளிவாக இருக்கின்றோம்.சமஸ்டி கட்டமைப்பில்,சுயநிர்ணய தீர்வை தான் நாம் எதிர் பார்க்கின்றோம்.

நாம் தமிழ் கட்சிகள் தெளிவாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.ஒரு நாளும் 13ஆவது திருத்தும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு தராது.அதிலும் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து,தமிழ் மக்களை குழப்புவதற்கு பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது.

நாம் இந்தியாவுக்கு பேரம் போக மாட்டோம்.இலங்கை இந்திய ஒப்பந்த உரித்து அடிப்படையில் நாம் அவர்களிடமிருந்து பெறவேண்டியதை பெறுவோம். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கத்தி கத்தி களைத்து விட்டோம்.

அதற்காக அப்படியே இதை விட்டு விட்டோம் என்று நினைக்க வேண்டாம்.தமிழர் இருப்புக்கு நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு