மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று! 10ம், 11ம் வகுப்புக்கள் முடக்கம்..

ஆசிரியர் - Editor I
மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று! 10ம், 11ம் வகுப்புக்கள் முடக்கம்..

ஹட்டன் - கினிகத்தேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 8 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன் காரணமாக தொற்றாளர்கள் கல்வி கற்ற 10 ஆம், 11 ஆம் வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்விக் கற்ற வகுப்புகளுக்கு கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். 

நேற்றய தினம் பாடசாலைக்கு 150 மாணவர்கள் வரை சமூகமளித்திருந்தாக அவர் கூறினார். 

இவர்களில் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

அதேபோல் 63 ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

தொற்றுக்குள்ளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடி தொடர்பை பேணியவர்கள் அனைவரும் சுய தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

தொற்றாளர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த 500 மாணவர்கள் வரையில் வீடுகளில் இருக்க பணிக்கப்பட்டுள்ளதாக 

அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு