வீட்டு வளவை துப்புரவு செய்தபோது பாம்பு தீண்டியதில் குடும்ப பெண் ஆபத்தான நிலையில்..!

ஆசிரியர் - Editor I
வீட்டு வளவை துப்புரவு செய்தபோது பாம்பு தீண்டியதில் குடும்ப பெண் ஆபத்தான நிலையில்..!

வீட்டு வளவை துப்புரவு செய்தபோது பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவில் ஆத்தான நிலையில் உள்ளார். 

குறித்த சம்பவம் திருகோணமலை - கந்தளாய் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. இச்சம்பவம் நேற்று(16) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் 24 வயதுடைய தாயொருவருக்கே பாம்பு தீண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராறு பகுதியில் தனது வீட்டு வளவினை துப்பரவு பணிகளை செய்த வேளை பாம்பு தீண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

என்ன பாம்பு தீண்டியது என்பது சரியாக தெரியாது எனவும் கால்கள் வீங்கிய நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 

சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு