வர்த்தக நிலையத்தை உடைத்து உட்புகுந்த கொள்ளை கும்பல்! சிகரெட் மற்றும் பணம் கொள்ளை..

ஆசிரியர் - Editor I
வர்த்தக நிலையத்தை உடைத்து உட்புகுந்த கொள்ளை கும்பல்! சிகரெட் மற்றும் பணம் கொள்ளை..

வர்த்தக நிலையத்தை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல் வர்த்தக நிலையத்திலிருந்து பெருமளவு சிகரெட் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் திருகோணமலை - உப்புவெளி ஆண்டாங்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

இச்சம்பவம் இன்று(16) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலையத்தைச் சுற்றிப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பி வலை வெட்டப்பட்டு 

கதவும் உடைக்கப்பட்டு உள்நுழையப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.வர்த்தக நிலையத்தில் சிகரெட் 

மற்றும் பணம் போன்றவை திருடப்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸாரின் உதவியுடன் கைரேகை நிபுணர்களின் உதவியுடனும் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு