சமிக்ஞை விளக்கில் காத்திருந்த வாகனங்களை மோதி தள்ளிய பேருந்து! பேருந்தை நிறுத்திவிட்டு சாரதி தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
சமிக்ஞை விளக்கில் காத்திருந்த வாகனங்களை மோதி தள்ளிய பேருந்து! பேருந்தை நிறுத்திவிட்டு சாரதி தப்பி ஓட்டம்..

பேருந்து ஒன்று 3ற்கும் மேற்பட்ட வாகனங்களை மோதி தள்ளி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பி ஓடியுள்ளதாகவும் தொியவருகின்றது. 

குறித்த சம்பவம் மன்னார் - தலைமன்னார் வீதியில் இடம்பெற்றுள்ளது. பிரதேச செயலகத்திற்கு சொந்தமான வாகனம், டிப்பர், முச்சக்கர வண்டி, துவிச்சக்கர வண்டி என வரிசையில் சமிஞ்சைக்காக காத்திருந்த வாகனங்களை 

வைத்தியசாலை வீதியூடாக ஸ்ரேடியம் நோக்கி பயணித்த பேருந்து மோதித் தள்ளியுள்ளது. குறித்த பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சமிஞ்சைக்காக காத்திருந்த ஏனைய வாகனங்களை மோதித்தள்ளியுள்ளது. 

சம்பவத்தில் முச்சக்கர வண்டி முழுதாக சேதமடைந்ததுடன் ஏனைய வாகன சாரதிகள் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சாரதி அருகில் இருந்த வீதி ஒன்றில் பேருந்தை நிறுத்தி விட்டு தப்பித்து சென்றுள்ளார். 

இதனை தொடர்ந்து மன்னார் காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு