பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடிய நபர் சடலமாக மீட்பாம்! மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் சீற்றம், சடலத்தையும் ஏற்க மறுப்பு..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடிய நபர் சடலமாக மீட்பாம்! மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் சீற்றம், சடலத்தையும் ஏற்க மறுப்பு..

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்றபோது பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடிய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் திருகோணமலை - யான் ஓயா பகுதியில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, 

பல குற்ற செயல்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த நபர் குச்சவெளி பொலிஸார் கைது செய்ய முயன்றுள்ளனர்.

எனினும் பொலிசாரிடம் இருந்து சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.பின்னர் நேற்றுமுன்தினம் (07) யான் ஓயாவிற்கு அருகில் உள்ள சிறிய நீர்நிலையொன்றில் இருந்து குறித்த நபரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (08) சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெற்றதுடன், 

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து பிரேத பரிசோதனை அறிக்கையை உயிரிழந்தவரின் உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு