யாழ்.வலி,வடக்கிலிருந்து தெய்வ விக்கிரகங்கள் கடத்தல் விவகாரத்தில் இராணுவ சிப்பாய் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கிலிருந்து தெய்வ விக்கிரகங்கள் கடத்தல் விவகாரத்தில் இராணுவ சிப்பாய் கைது!

யாழ்.வலி,வடக்கிலிருந்து தெய்வ விக்கிரகங்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்றய தினம் குறித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டதாக தொியவருகின்றது. மேலும் சம்பவம் தொடர்பில் தொியவருவதாவது, வலி,வடக்கிலிருந்து தெய்வ விக்கிரகங்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், 

இருவர் கைது செய்யப்பட்டதுடன் பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் அடையாளப்படுத்தப்பட்டதுடன் சுமார் 20 விக்கிரகங்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

இதன் தொடர்ச்சியாக விக்கிரகங்கள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 42 வயதான இராணுவ சிப்பாய் ஒருவர் இராணுவ பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு