வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கடை உடைத்து திருட்டு! யாழ்ப்பாணத்திலிருந்து வாழைச்சேனை சென்று துாக்கிவந்தது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கடை உடைத்து திருட்டு! யாழ்ப்பாணத்திலிருந்து வாழைச்சேனை சென்று துாக்கிவந்தது பொலிஸ்..

திருகோணமலை - வாழைச்சேனையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து கொள்ளையடித்த நபரை வாழைச்சேனை சென்று பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மேலும் சந்தேகநபர் திருடிய தொலைபேசிகளை விற்பனைக்கு கொடுத்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்.கே.கே.எஸ். வீதி - சத்திரச்சந்தியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் 

கடந்த டிசம்பர் 22ம் திகதி இரவு திருட்டு இடம்பெற்றது. அது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் சிசிரிவி பதிவுகளில் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

யாழ்.தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் றில்ரோக் தலைமையிலான குழுவினர் கடந்த வியாழக்கிழமை வாழைச்சேனை சென்று சந்தேக நபரைக் கைது செய்தனர்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட அலைபேசிகளை விற்பனை செய்து கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் 6 அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு