தொழிற்சங்க நடவடிக்கையினால் யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட வடக்கிலுள்ள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்..

ஆசிரியர் - Editor I
தொழிற்சங்க நடவடிக்கையினால் யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட வடக்கிலுள்ள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்..

சுகாதார தொழிற்சங்கம் நாடு தழுவிய ரீதியிலும், மாகாண ரீதியிலும் நடத்தப்படும் பணி புற்கணிப்பு போராட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலை உட்பட வடக்கின் பல வைத்தியசாலைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.

வடக்கில் வைத்தியசாலைகளில் அவசர மற்றும் உயிர்காப்பு சிகிச்சைகளுக்கு மாத்திரம் சுகாதார தொழிற்சங்கங்கள் செயற்பட்டதுடன் மேலதிக விடயங்களில் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

இதனால் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்து விநியோகப் பிரிவு என்பன செயலிழந்து காணப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில்வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு