வீதியால் சென்ற சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை பறித்து சென்ற கும்பல்! யாழ்.தாவடியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீதியால் சென்ற சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை பறித்து சென்ற கும்பல்! யாழ்.தாவடியில் சம்பவம்..

வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை திருடிச் சென்ற வழிப்பறி கொள்ளை கும்பலை பொலிஸார் தேடிவருகின்றனர். 

குறித்த கொள்ளை சம்பவம் சுன்னாகம் - தாவடி பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. 

மருதனார்மடம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் தொலைபேசியில் பேசியபடி சைக்களில் சென்றுள்ளார். 

இதன்போது அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் குறித்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை பறித்து சென்றுள்ளனர். 

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு