யாழ்.கோண்டாவில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 3வது ரவுடி கைது! மேலும் 10 ரவுடிகளை தேடுகிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 3வது ரவுடி கைது! மேலும் 10 ரவுடிகளை தேடுகிறது பொலிஸ்..

யாழ்.கோண்டாவில் பகுதியில் கடந்த 23ம் திகதி வீடொன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துச் சென்று சேதப்படுத்திய வன்முறை கும்பலை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

23ம் திகதி அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துச் சென்று உப்புடம் சந்தியில் வைத்து அடித்து உடைத்து சென்றது. 

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த விசேட பொலிஸ் பிரிவு இரு ரவுடிகளை கைது செய்திருந்த நிலையில், யாழ்.சங்கானை பகுதியை சேர்ந்த18 வயதான மேலும் ஒரு ரவுடியை கைது செய்துள்ளனர். 

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 ரவுடிகளை பொலிஸார் தேடிவருவதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு