இரு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் ஸ்தலத்தில் பலி, மற்றொருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
இரு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் ஸ்தலத்தில் பலி, மற்றொருவர் படுகாயம்..

இரு கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று காலை திருகோணமலை - கண்டி வீதியில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனமும், 

திருகோணமலையை நோக்கி மண்கலந்த சிறிய கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.இதனால் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகன சாரதி ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளார். 

டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தினால் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்ததுடன் பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்கள் வீதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு