வெட்டிக் கொல்லப்பட்ட குடும்பஸ்த்தர்! இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்..

ஆசிரியர் - Editor I
வெட்டிக் கொல்லப்பட்ட குடும்பஸ்த்தர்! இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்..

தலைமன்னார் - ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் குடும்பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

சடலமாக மீட்கப்பட்ட நபர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக் கிழமை (26) காலை 11 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன், சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுவதான கூறியுள்ளனர்.

இதே வேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு