யாழ்.அரியாலை - நெடுங்குளம் பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது அதிரடிப்படை துப்பாக்கி சூடு! ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை - நெடுங்குளம் பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது அதிரடிப்படை துப்பாக்கி சூடு! ஒருவர் படுகாயம்..

யாழ்.அரியாலை - நெடுங்குளம் பகுதியில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. நெடுங்குளம் பகுதியில் மணல் கடத்தல் கும்பலை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். 

இந்நிலையில் முற்றுகைக்குள்ளிருந்து உழவு இயந்திரத்துடன் தப்பி ஓட முயற்சித்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடாத்தியிருக்கின்றனர். 

சம்பவத்தில் அரியாலை - முள்ளி பகுதியை சேர்ந்த யசிந்தன் (வயது 27) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 

அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு