கொழும்பிலிருந்து 5 லட்சத்து 40 ஆயிரம் பெறுமதியான போதைப் பொருளை கடத்திவந்த நபர் சிக்கினார்!

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து 5 லட்சத்து 40 ஆயிரம் பெறுமதியான போதைப் பொருளை கடத்திவந்த நபர் சிக்கினார்!

கொழும்பிலிருந்து போதைப் பொருள் கடத்திவந்த 40 வயதான போதைப் பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து 

இராணுவ புலனாய்வு பிரிவினரும் நடத்திய சுற்றிவளைப்பில் குறித்த வியாபாரி கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 30 கிராம் ஐஸ் போதைப் பொருளும் போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன், 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 540,000 ரூபா என கைது செய்யப்பட்ட போதை வியாபாரியே தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப்பொருள் வியாபாரியைக் கைது செய்வதற்காக மிக நீண்ட நாட்களாக இவரைப் பின்தொடர்ந்து வந்ததுடன், திட்டமிடல்களும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே 

வசமாக மாட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்ட நபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு