யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் தனியார் காணி ஒன்றில் வைத்தியசாலை கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்டதா?

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் தனியார் காணி ஒன்றில் வைத்தியசாலை கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்டதா?

யாழ்.பல்கலைகழகத்திற்கு முன்பாகவுள்ள தனியார் காணியில் ஒரு தொகுதி வைத்தியசாலை கழிவுகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சுற்றாடல் அதிகார சபையினர் கவனம் செலுத்தியுள்ளனர். 

பரமேஸ்வராச் சந்தியில் உள்ள தனியார் வைத்தியசாலையின் கழிவுகளே இப் பகுதியில் தீயிட்டு கொழுத்தப்படுவதாக மக்கள் செய்த முறைப்பாட்டின் பெயரில் மாநகர சபை உறுப்பினர்கள் 

அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரத் துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த சுகாதாரத் துறையினர் ஆதாரங்களைத் திரட்டியதோடு 

இது தொடர்பில் உடன் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த வைத்தியசாலைக்கு ஏற்கனவே பல தடவை அறிவுறுத்தப்பட்டுள்ளபோதும் 

மீண்டும் இவ்வாறான ஒரு செயல் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தனர். இது தொடர்பில் உடனடியாக சுற்றுச் சூழலிற்கு பொறுப்பான பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதுடன், அங்கு கொட்டி எரிக்கப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு