யாழ்.கோண்டாவில் மற்றும் கொக்குவில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவில் மற்றும் கொக்குவில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

யாழ்.கோண்டாவில் பகுதியில் நேற்றுமுன்தினம் 23ம் திகதி வீடொன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துச் சென்று சேதப்படுத்திய வன்முறை கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

23ம் திகதி அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துச் சென்று உப்புடம் சந்தியில் வைத்து அடித்து உடைத்து சென்றது. 

இதே கும்பல் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அந்த வீட்டில் இருந்த இளைஞரை தேடியுள்ளது. எனினும் அவர் வீட்டில் இல்லாத நிலையில் இளைஞனின் தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளது. 

இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு