யாழ்.வலி,வடக்கில் கடந்த 15 நாட்களில் 5 விக்கிரகங்கள் திருட்டு! திருடப்பட்ட விக்கிரகங்களின் புகைப்படங்கள், மற்றும் இரு விக்கிரகங்களுடன் ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கில் கடந்த 15 நாட்களில் 5 விக்கிரகங்கள் திருட்டு! திருடப்பட்ட விக்கிரகங்களின் புகைப்படங்கள், மற்றும் இரு விக்கிரகங்களுடன் ஒருவர் கைது..

யாழ்.வலி,வடக்கில் கடந்த சில நாட்களில் கோவில் விக்கிரகங்கள் காணாமல்போன நிலையில் விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கடந்த 9ம் திகதி தொடக்கம் 23ம் திகதிவரையான காலப்பகுதியில் 5 விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளது. 

குறித்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்,

உப பொலிஸ் பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

அவரது அலைபேசியில் திருடப்பட்ட 5 விக்கிரகங்களின் ஒளிப்படங்களும் காணப்பட்டன. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 

மேலும் 2 விக்கிரகங்கள் கைப்பற்றப்பட்டன. அவை இரண்டும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு