யாழ்.வல்லைவெளியை அழகுபடுத்தும் விசேட செயற்றிட்டம் இன்று அங்குரார்ப்பணம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்லைவெளியை அழகுபடுத்தும் விசேட செயற்றிட்டம் இன்று அங்குரார்ப்பணம்!

“செழுமையான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கு” என்னும் தொனிப்பொருளில் பசுமை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ்.வல்லைவெளியை அழகுபடுத்தும் திட்டம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டிருக்கின்றது. 

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் இந்த செயற்றிட்டங்களுக்கான முன்மொழிவுகளை, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்திருந்தார்.

64 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வல்லைவெளிப்பகுதியில், வரவேற்பு வளைவு, நடைபாதை, இளைப்பாறும் பகுதிகள், வாகன தரிப்பிடங்கள், இயற்கை ரசனை மையங்கள், சிற்றுண்டி மையங்கள், கழிப்பறை வசதிகள், 

வல்லைச்சந்தி மேம்படுத்தல் என்பன இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ளது.இன்றைய ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், 

பிரதேச செயலாளர் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு