யாழ்.கந்தர்மடம் சந்தியருகில் பேருந்துடன் மோதி விபத்து! இளைஞர்கள் இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கந்தர்மடம் சந்தியருகில் பேருந்துடன் மோதி விபத்து! இளைஞர்கள் இருவர் படுகாயம்..

யாழ்.கந்தர்மடம் சந்தியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்.நகரிலிருந்து கோண்டாவில் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் , யாழ்.நகர் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு