யாழ்.சீனிவாசகம் வீதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை! கொள்ளையடித்த பொருட்களை விற்க முயன்றபோது கொள்ளையன் உட்பட 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சீனிவாசகம் வீதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை! கொள்ளையடித்த பொருட்களை விற்க முயன்றபோது கொள்ளையன் உட்பட 3 பேர் கைது..

யாழ்.சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த இலத்திரனியல் உபகரணங்களை கொள்ளையடித்து சென்ற நிலையில், கொள்ளையடித்த பொருட்களை விற்க முயன்றபோது சிக்கியுள்ளனர். 

மேலும் கொள்ளையடித்த பொருட்களை விற்பனை செய்ய உதவிய தரகரும் யாழ்.தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

யாழ்.சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள்  வீட்டிலிருந்த 43” தொலைக்காட்சி, சீடி பிளேயர் மற்றும் சமையல் அறை இலத்திரனியல் உபகரணங்கள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்  விசாரணைகளை முன்னெடுத்திருந்த குற்றத்தடுப்பு பொலிஸார் தடயவியல் விசாரணைகளை அடுத்து குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டில்ருக் தலைமையிலான அணியினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

திருடப்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டபோது, அதனை விற்பனை செய்ய உதவிய தரகரும் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டனர். கொழும்பு வெள்ளைவத்தையைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபர், 

திருமணம் முடித்து அச்சுவேலியில் வசித்து வருகிறார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கடந்த 10ஆம் திகதி அச்சுவேலியில் ஒருவரைத் தாக்கி அவர் அணிந்திருந்த மோதிரத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்தை சந்தேக நபர் ஒத்துக்கொண்டார்.

அதனடிப்படையில் அந்த மோதிரத்தை நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்து வழங்கி ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு