பாடசாலை நேரத்தில் பாடசாலைக்கு வெளியே வீதியில் நின்ற மாணவர்கள்! என்னை ஏன் கேட்கிறீர்கள் என்கிறார் அதிபர், ஆராய்கிறேன் என்கிறார் கல்வியமைச்சின் செயலாளர்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை நேரத்தில் பாடசாலைக்கு வெளியே வீதியில் நின்ற மாணவர்கள்! என்னை ஏன் கேட்கிறீர்கள் என்கிறார் அதிபர், ஆராய்கிறேன் என்கிறார் கல்வியமைச்சின் செயலாளர்..

யாழ்.காரைநகரில் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் வீதியில் நின்ற சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு எதுவும் தொியாது. மேலிடத்தை கேளுங்கள். என அதிபர் பதிலளித்துள்ளார். 

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே ஆங்காங்கே நிற்பதை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் ஆதாரத்துடன் அதிபரிடம் கேட்டபோது என்னிடம் எதையும் கேட்க வேண்டாம் மேலிடத்தில் கேளுங்கள் என பதிலளித்தார்.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் ஊடகவியலாளர்கள் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்த ஒரு மணித்தியாலமும்  பல மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே நின்றிருந்தனர். சிலர் கடைகளுக்கு செல்வதும் 

பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதுமாக காணப்பட்டனர். இதனை அவதானித்த ஊடகவியலாளர்கள் பாடசாலையின் அதிபரைச் சந்தித்து, "பாடசாலை நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் எதற்காக வெளியே நிற்கின்றார்கள்?

" என கேட்டபோது குறித்த பாடசாலை அதிபர் இவ்வாறு பதில் வழங்கினார். மேலிடத்தில் அனுமதி வாங்கிவிட்டு வந்தீர்களா?" என கேட்டார். அதற்கு ஊடகவியலாளர்கள், "மாணவர்கள் வெளியில் நிற்பது தொடர்பாக அதிபரிடம் எடுத்துரைப்பதற்கு 

மேலிடத்தில் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை" என கூறினர். அதற்கு மீண்டும் பதிலளித்த அதிபர், " மாணவர்கள் வெளியில் நின்றால் அதை ஏன் என்னிடம் வந்து கேட்கின்றீர்கள், போய் மேலிடத்தில் அனுமதி பெற்றுவிட்டு வாருங்கள் எனக்கூறி 

ஆசிரியர்கள் சிலரை அழைத்து ஊடகவியலாளர்களை மிரட்டுவது போல் செயற்பட்டிருந்தார். தற்போது வீதி விபத்துக்களும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அதிபர் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது ஒரு ஆரோக்கியமான விடயமா?அண்மையில் குறித்த அதிபர் மாணவன் ஒருவரை தாக்கி, 

அந்த மாணவனின் செவிப்பறை பாதிப்படையச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு