யாழ்.காரைநகர் பிரதேசசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு 2வது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் பிரதேசசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு 2வது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது!

யாழ்.காரைநகர் பிரதேசசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு 2வது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டடுள்ள நிலையில் தவிசாளர் பதவியை இழந்துள்ளார். 

2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாக நேற்றய தினம் சமர்ப்பிக்கப்பட்டது. 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில், 

பாதீட்டுக்கு சுயேச்சை குழுவின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 2 உறுப்பினர் என 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர் 

உள்ளிட்ட 6 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். அதன் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் 1 மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடவைகள் காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டதால் தவிசாளரும் தனது பதவியை இழந்துள்ள நிலையில்

14 நாட்களுக்குள் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு