கடற்படையனால் ஒப்படைக்கப்பட்ட கஞ்சாவை கையாடல் செய்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்! யாழ்.இளவாலை பொலிஸ் நிலையத்தில்..

ஆசிரியர் - Editor I
கடற்படையனால் ஒப்படைக்கப்பட்ட கஞ்சாவை கையாடல் செய்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்! யாழ்.இளவாலை பொலிஸ் நிலையத்தில்..

யாழ்.மாதகல் கடற்பரப்பில் கடந்த 6ம் திகதி கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கேரள கஞ்சாவை களவாடிய பொலிஸ் நிலைய உப பரிசோதகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மாதகல் கடற்பரப்பில் இந்த மாதம் 6ஆம் திகதி கடற்படையினரால் ஒரு தொகுதி கஞ்சா கடலில் மீற்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா இளவலைப் பொலிசாரிடம் சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினரால் கையளிக்கப்பட்டது. 

இவ்வாறு கையளிக்கப்பட்ட கஞ்சா தொடர்பில் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்து சான்றுப் பொருளாக கஞ்சாவை ஒப்படைத்த சமயம் கஞ்சாவில் ஒரு பகுதியினை குறித்த பொலிஸ் உப பரிசோதகர் கையாடல் செய்துள்ளார். 

இதனையடுத்து உப பரிசோதகர் கடந்த 17 ஆம் திகதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு