அமெரிக்க பயணத்தின் பெறுபேறு ஜனவரியில் தெரியவரும்!

ஆசிரியர் - Admin
அமெரிக்க பயணத்தின் பெறுபேறு ஜனவரியில் தெரியவரும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும் எனும் தலைப்பில் கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வு யாழ் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.  இங்கு உரையாற்றுகையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்,

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டுக் கொள்கைகள் இன்றிச் செயற்படவில்லை.  முறையான அணுகுமுறைகளைக் உரிய தருணங்களில் மேற்கொண்டே வந்திருக்கின்றது.  அதனைப் பலர் அறிவதில்லை.  தற்போது கூட அமெரிக்கப் பயணத்தின் பின்னனர் இலங்கையில் உள்ள உயர்ஸ்தானிகர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களைச் செய்துள்ளேன்.

 ஆனால் அந்தச் சந்திப்புகள் புகைப்படங்களைப் பிடித்து முகநூலில் போட்டு பிரச்சாரம் செய்வதற்குரியவை அல்ல.  ஆகவேரூபவ் வெளிவிவகார விடயங்களை முறையாக கையாளவில்லை என்ற கவலை யாருக்கும் தேவையில்லை.  அது முறையாக செயல்படுத்தப்பட்டே வரப்படுகிறது.

 அதன் காரணமாகவே ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இன்னும் தமிழர்களின் விவகாரத்தில் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 அண்மையில் எனது தலைமையில் அமெரிக்காவுக்குச் சென்ற குழுவானது முக்கிய சந்திப்புகளில் ரூடவ்டுபட்டுள்ளது.  அந்தச் சந்திப்புகள் பற்றி இந்தப் பொதுவெளியில் பகிரங்கமாக அனைத்தையும் கூறிவிட முடியாது.

 ஆனால் 2011ஆம் ஆண்டு இவ்விதமானதொரு பயணம் நடைபெற்றது.  அதன் பின்னர் தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர்களின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் சென்றிருந்தன தொடர்ச்சியாக அது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கரிசனையும் காணப்படுகின்றது.

 அதேபோன்று தான் தற்போதைய விஜயத்தின் பெறுபேறுகளை உடனடியாக கண்டுவிட முடியாது.  வரும் ஜனவரி மாதம் முதல் அப்பெறுபேறுகளை அனைவரும் உணரக்கூடியதாக இருக்கும்.

 தற்போது அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு நிரலில் உள்ள நிலையில் இந்தியாவை விட்டு அமெரிக்காவிடம் சென்றதாக விமர்சனம் செய்கிறார்கள்.  அவ்வாறில்லை.  இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்த நிலையில் தான் உள்ளது என்பதை நாம் அறிவோம்.  இரு நாடுகளும் இணைந்தே அடுத்த கட்ட விடயங்களை முன்னெடுக்கின்றன.  வொஷிங்டனும் புதுடெல்லியும் அதுபற்றிய உரையாடலில் தொடர்ச்சியாக உள்ளன.  ஆகவே டெல்லியை விட்டு வொஷிங்டனிடத்திலோ, வொஷிங்டனை விட்டு டெல்லியிடத்திலோ சென்றதாக அச்சப்பட வேண்டியதில்லை.

 மேலும் வடக்கு கிழக்கில் சீனா பிரசன்னம் செய்வதை நாம் விரும்புகிறோம்.  இதனை நாம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தெரிவித்து விட்டோம்.  வடக்கு கிழக்கில் பிரச்சினைகள் தீர்க்கப்படாது நீடிப்பதை சில தரப்புக்கள் விரும்புகின்றன.  ஆனால் அவ்விதமான நிலைமை தொடராக இருந்தால் வெளித்தரப்புக்களின் தலையீட்டுக்கு அது வழிவகுத்து விடும்.

 ஆகவே பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாம் தெளிவாக கூறிவிட்டோம்.  மேலும், வடக்கு கிழக்கில் சீன பிரசன்னத்தினை நாம் விரும்புவதற்கான காரணங்கள் உள்ளன.  குறிப்பாக சீனா மனித உரிமைகளையோ ஜனநாயகத்தினையோ பொருட்டாக கொள்வதில்லை.

 அவ்வாறான நிலையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் ஜனநாயக முறையில் பொறுப்புக்கூறலையும் எதிர்பார்க்கும் தமிழ் தரப்பு சீனாவினை ஏற்றுக்கொள்ள முடியாது.

 அதேநேரம், இலங்கைத்தீவு, வடக்கு, கிழக்கு தென்சீனக் கடலில் இல்லை.  அது இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கு மிக அருகில் வெறும் 32கிலோமீற்றர் தொலைவிலேயே உள்ளது.  அவ்வாறிருக்கையில் இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளையே தமிழ்த் தரப்பு உள்வாங்கிக் கொள்ள முடியும்.

 ஆகவே சீனாவின் பிரசன்னம் இந்தியாவுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.  மேலும் இந்தியா தமிழர்கள் விடயத்தில் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளது.  அவ்வாறான நிலையில் சீனாவை தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு