யாழ்.எழுவைதீவு கடலில் மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது! 2 இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.எழுவைதீவு கடலில் மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது! 2 இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டது..

யாழ்.எழுவைதீவை அண்மித்த கடற்பகுதியில் மேலும் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2 இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக 

இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை நேற்று 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு