உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ்.கொட்டடியை சேர்ந்த வயோதிப பெண் மரணம்!

ஆசிரியர் - Editor I
உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ்.கொட்டடியை சேர்ந்த வயோதிப பெண் மரணம்!

உண்ணிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த வயோதிப பெண்மணி ஒருவர் நேற்றய தினம் உயிரிழந்துள்ளார். 

யாழ்.கொட்டடியை சேர்ந்த செபஸ்த்தியன் பெனடிக் றொசாரி (வயது63) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 16ம் திகதி அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்மணி

3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றய தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கு காரணம் உண்ணிக் காய்ச்சல் என மருத்துவ அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு