போதைப் பொருள் கடத்தல்காரர்களை முற்றுகையிடுவதற்காக துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி பலி!

ஆசிரியர் - Editor I
போதைப் பொருள் கடத்தல்காரர்களை முற்றுகையிடுவதற்காக துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி பலி!

திருகோணமலை - முள்ளிப்பொத்தனை பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை முற்றுகையிட முயற்சித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கஜ்ஜி முகமது தாரிக் வயது 49 என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தெரியவருவதாவது, தம்பலகாமம் பொலிஸாருக்கு ஹோரொயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்களை முள்ளிப்பொத்தானை என்ற இடத்தில் 

கைது செய்ய முற்பட்டபோதே இவ் மரணம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்டவர் கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணம் குறித்து மேலதிக விசாரணை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் 

பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு