யாழ்.வலிகாமம் வடக்கில் 30 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வலிகாமம் வடக்கில் 30 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது!

யாழ்.வலி, வடக்கு பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்று காலை வெள்ளிக்கிழமை மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். 

இந்நிலையில் நில அளவை திணைக்களத்தினர் காணி அளவீடு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு