யாழ். பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் திங்களன்று ஆரம்பம்!

ஆசிரியர் - Editor I
யாழ். பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் திங்களன்று ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார். 

அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 30 ஆம் திகதி நிர்வாக முடக்கல் போராட்டத்தை ஆரம்பித்தனர். 

இதன் காரணமாக கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ கற்கைகள், வணிக பீட மாணவர்களுக்கான கற்கை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் நிர்வாக முடக்கல் போராட்டத்தை நேற்றுடன் முடிவுக்கு கொண்டு வருவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் துணைவேந்தருக்கு அறிவித்திருந்தனர். 

அதனடிப்படையில், எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து பீடங்களின் கற்கை நடவடிக்கைகளும் ஆரம்பிக்கும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு