யாழ்.திருநெல்வேலி- பரமேஸ்வரா சந்தியில் இளைஞன் மீது துரத்தி.. துரத்தி வாள்வெட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி- பரமேஸ்வரா சந்தியில் இளைஞன் மீது துரத்தி.. துரத்தி வாள்வெட்டு!

யாழ்.பரமேஸ்வரா சந்தியில் இளைஞன் ஒருவரை வழிமறித்த வாள்வெட்டு குழு ரவுடிகள் குறித்த இளைஞன் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு நடத்தியுள்ளனர். 

குறித்த சம்பவம் மிக அதிகமான சன நடமாட்டம் உள்ள பகுதியில் இன்றைய தினம் பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.நகர்ப பகுதியை நோக்கிக் குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, 

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து கடுமையான வாள் வெட்டினை மேற்கொண்டனர்.

கும்பலின் தாக்குதலிலிருந்து தப்பித்து, பல்கலைக்கழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , துரத்தித் துரத்தி வெட்டப்பட்டுள்ளார். 

வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 

தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு