யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த 2வது மீனவரின் சடலமும் இன்று காலை மீட்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த 2வது மீனவரின் சடலமும் இன்று காலை மீட்கப்பட்டது!

மன்னார் - கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த 2வது மீனவரின் சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளது. 

யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த துாண்டில் மீன்பிடி தொழிலாளர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோந்தைப்பிட்டி கடலில் சென்றுகொண்டிருந்த நிலையில், 

மீனவர் ஒருவர் படகிலிருந்து தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக கடலில் பாய்ந்த மற்றய மீனவரும் கடலில் இழுத்து செல்லப்பட்டு

காணாமல்போயிருந்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் ஒரு மீனவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதுடன், 

மற்றய மீனவர் தேடப்பட்டுவந்த நிலையில் இன்று காலை மன்னார் உப்பளம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு