யாழ்.கொடிகாமம் - வரணியில் பயணிகள் பேருந்து மீது டிப்பர் மோதி கோர விபத்து! 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - வரணியில் பயணிகள் பேருந்து மீது டிப்பர் மோதி கோர விபத்து! 3 பேர் படுகாயம்..

யாழ்.கொடிகாமம்  - வரணி பகுதியில் பயணிகள் பேருந்து மீது டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

பயணிகள் பேருந்து மீது டிப்பர் வாகனம் மோதியபோதே விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்து வரணி - கொடிகாமம் வீதியில் வரணிச் சந்திப் பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது.

படுகாயம் அடைந்த பயணிகள் மூவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு