தமிழ் - சிங்கள மக்களுக்கிடையில் மொழி ஒரு தடைக்கல்லாக இருந்திருக்காவிட்டால் 30 வருட யுத்தம் தேவையற்றுபோயிருக்கும்!

ஆசிரியர் - Editor I
தமிழ் - சிங்கள மக்களுக்கிடையில் மொழி ஒரு தடைக்கல்லாக இருந்திருக்காவிட்டால் 30 வருட யுத்தம் தேவையற்றுபோயிருக்கும்!

தமிழ் - சிங்கள மக்களுக்கிடையில் மொழி ஒரு தடையாக இருந்திருக்காவிட்டால் இந்த நாட்டில் 30 வருடங்கள் யுத்தம் நடந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. என இந்து பெளத்த கலாச்சாரப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்தினதேரர் தெரிவித்தார்.

இந்து பெளத்த கலாச்சாரப் பேரவையின் வடமாகாண தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற இரண்டாம் மொழிக் கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு 

உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இந்து பெளத்த கலாச்சாரப் பேரவையூடாக சுமார் 15ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சிங்கள மொழியை கற்று வெளியேறியுள்ளனர். 

இந்த பணியை தொடர்ந்து நாம் மேற்கொள்வோம். நாட்டில் தற்போது இடம்பெறும் ஆட்சி சரியானதா என்று கேள்விக்கு மத்தியில் பிரச்சினைகளை கூறுவதிலும் பார்க்க நாட்டில் உள்ள காணிகளை நாட்டு மக்களுக்கு வழங்குவதன் மூலம் 

பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். நாட்டில் முதுகெலும்பான விவசாயத்துறையை ஊக்குவிக்க மக்களுக்கு காணிகளை வழங்க வேண்டும். காஸ் அடுப்புகள் வெடிக்கிறது. ஏன் ஒவ்வொருவரும் இயற்கை வாயுவை உற்பத்தி செய்ய முடியாது? 

வீட்டுக்கு ஒரு பசுவை வளர்த்தால் தொழில் முயற்சிமை மேம்படுத்துவதோடு இயற்கை வாயுவையும் உற்பத்தி செய்யலாம். ஆகவே நாட்டை வழிநடத்துபர்களுக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருக்கிறது.

ஆகயால் மக்கள் சிறந்த முறையில் வாழ்வதற்கு வழி அமைப்பார்கள் என நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு