யாழ்ப்பாணத்தை மிரட்டிய தென்பகுதி பேரூந்து !!

ஆசிரியர் - Editor II
யாழ்ப்பாணத்தை மிரட்டிய தென்பகுதி பேரூந்து !!

தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த பேரூந்து ஒன்றில் ‘ இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச நடனத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தென்பகுதியிலிருந்து வருகை தந்த பேரூந்தின் பின்னால் மேற்படி வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் தற்போது இனவாதம் களையப்பட்டள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பவாத கூட்டமைப்பின் பரிபூரணமான ஆசீர்வாதத்துடனும் சம்மதத்துடனுமே அரங்கேற்றப்பட்டு வருவதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு