யாழில்.பேருந்தினை திருடி சென்ற பலே திருடன்..!!

ஆசிரியர் - Editor II
யாழில்.பேருந்தினை திருடி சென்ற பலே திருடன்..!!

அண்டிய பகுதியில் பேருந்தை திருடி சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ் – மன்னாருக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமையும் வழமை போன்று சேவையில் ஈடுபட்டு யாழ்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி வந்திருந்தது.

பயணிகளை யாழ்.நகரில் இறக்கி விட்டு , நகரை அண்டிய பண்ணை பகுதியில் பேருந்தை நிறுத்தி விட்டு சாரதியும் நடத்துனரும் அருகில் இருந்த உணவகத்தில் உணவருந்த சென்று விட்டனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாழ்.பொம்மை வெளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேருந்தை திறப்பு இன்றி இயக்கி அதனை களவாடி சென்றுளார்.

சிறிது தூரம் பேருந்தினை களவாடி சென்ற போது பேருந்து சகதிக்குள் அகப்பட்டு தொடர்ந்து செல்ல முடியாது மாட்டிக்கொண்டது. அந்நேரம் அந்த வழியாக வந்த வேறு தனியார் பேருந்து சாரதிகள் இருவர் , குறித்த பேருந்தினை அவதானித்து பேருந்தின் சாரதி வேறு ஒருவராக இருப்பதனையும் நடத்துனரை காணாததாலும் சந்தேகம் கொண்டு பேருந்தின் சாரதிக்கு தொலை பேசி ஊடாக தொடர்பு கொண்டனர்.

அந்நேரமே சாரதிக்கும் நடத்துனருக்கும் பேருந்து திருடி செல்லப்பட்டமை தெரிய வந்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து பேருந்து திருடனை பிடித்து காவற்துறையினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து ஒப்படைத்தனர்.

யாழ்.நகர் பகுதியில் சைக்கிள் மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் தற்போது பேருந்து திருட்டு இடம்பெற்றமை அவ்விட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு