கனடா கிளையிடம் விளக்கம் கோரியுள்ளார் மாவை!

ஆசிரியர் - Admin
கனடா கிளையிடம் விளக்கம் கோரியுள்ளார் மாவை!

கனடாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

 இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனேடிய கிளையிடம் சம்பவம் தொடர்பான விடயங்களை கோரியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கனடாவில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றில் கலந்துகொண்டனர்.

 இதன்போது அங்கு வருகைதந்த சிலரால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

 இந்தச் சம்பவம் யாரால், ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு